இஸ்ரேலில் நிரம்பி வழியும் இறைவனின் தபால் பெட்டி!

இறைவனின் தபால் பெட்டி  இஸ்ரேலில் உள்ள புனிதத்தலமான ஜெரூசலேத்தில் நிரம்பி வழிகிறது. இதனால் அவ்வப்போது அதனை சுத்தம் செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நீண்ட துடைப்பங்களுடன் கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டுகளை அவர்கள் பெருக்கி எடுத்து பையில் போட்டு கொண்டு செல்கின்றனர். இங்கு வருகை தருபவர்கள் இறைவனிடம் தங்கள் பிரார்த்தனைகளை இந்தத் துண்டுச் சீட்டுகளில்தான் இறக்கி வைத்துள்ளனர். இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான துண்டுச்சீட்டுகளை புராதன ஆலயத்தின் மேற்கு சுவர் இடுக்குகளில் இருந்து எடுத்துச் சென்று மவுண்ட் ஆலிவ்ஸ் பகுதியில் சடங்குகளுடன் புதைப்பது வழக்கம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment