இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்! கண்டனம் தெரிவித்த எச்.ராஜா

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு, எச்.ராஜா அவர்கள் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் நடத்தப்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதில் 200 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment