இருசக்கர வாகனங்களில் இனி ஹெல்மெட் கட்டாயம்!அதுவும் ஒருவர் அல்ல..!இருவர் அணிய வேண்டும்! உயர்நீதிமன்றம்

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது அவசியம்.அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்  இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment