இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம் நினைவு நாள்…

இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம் நினைவு நாள் ஜனவரி 31, 1987 . இவர் 1963ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அரசியல் ரீதியாகவும், தனிமனிதன் என்ற முறையிலும், மனிதாபிமான உணர்வோடு வாழ்ந்தவர் இவர். பக்தவச்சலம் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்குப் பின்னரும், அறிஞர் அண்ணாதுரையின் ஆட்சிக்கு முன்னரும் தமிழக முதல்வராக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
இவரது பதவிக்காலத்தோடு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் தான், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தம் கொண்டுவரப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment