இனி நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாற இரண்டே நாள்தான்!! ட்ராய் அதிரடி!!!

இந்தியாவில் ஜியோ நெட்வொர்க்கின் ஆதிக்கம் தொடங்கிய பிறகு எம்என்பி மூலம் மற்ற நெட்வொர்க்கிற்கு மாறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் மற்ற நெட்வொர்க்கின் லாபம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற முக்கிய நெட்வொர்க் நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை கட் செய்யும் முடிவில் இருந்தது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டது.
இதனால் பல அதிரடி உத்தரவுகளை ட்ராய் கூறி வருகிறது. இதில் முக்கிமானது, குறைந்தபட்ச ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை முன்னறிவிபஅபின்றி கட் செய்ய கூடாது என்பது. அடுத்து , ஒரு நெட்வொர்க்கிலிருந்து இன்னொரு நெட்வொர்க்கிற்கு நம்பரை மாற்றாமல் மாறும் முறையை எந்த நிறுவனமும் நிராகரிக்க கூடாது என்றும், மேலும், இனி அவ்வாறு மாறும் காலம் 7 நாளிலிருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment