இந்த வார இறுதியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த வார இறுதியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சர்க்கரை நோய் பாதிப்பினால் அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் வெளிப் பயணங்களை தவிர்க்க AIIMS மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தவார இறுதியில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அருண் ஜெட்லிக்கு 3 வருடங்களுக்கு முன்பு உடல் எடைகுறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment