இந்த கதையும் திருட்டா?! ‘திமிரு புடிச்சவன் கதை என்னுடையது’ – பிரபல திகில் எழுத்தாளர் பேட்டி!!

தற்போது தமிழ்சினிமாவில் கதை திருட்டு பிரச்சனைகள் அதிகமாக அறங்கேறுகின்றன. அண்மையில் தளபதி விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்து, அது பெரிய பிரச்சனையை கிளப்பி எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றது.

தற்போது அதேபோல மீண்டும் ஓர் பிரச்சனை எழுந்துள்ளது. இம்முறை புகார் அளித்தது பிரபல திகில் கதை எழுத்தாளர் ராஜேஸ்குமார். அவர் கூறியதாவது, கடந்தவாரம் விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீஸான திமிரு புடிச்சவன் கதை எனது கதையின் மைய கருவை கொண்டுள்ளது என கூறினார். மேலும் இது போல பல படங்கள் எனது கதையை திருடியுள்ளன  என கூறி பரபரப்பை கிளப்பினார்.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment