இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களில் தேனி மாவட்டம் பெரிய குளம் காவல் நிலையம் 8 வது இடத்தை பிடித்துள்ளது…!!

இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களில் தேனி மாவட்டம் பெரிய குளம் காவல் நிலையம் 8 வது இடத்தை பிடித்துள்ளது.
2018-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது. அதேபோல் 2018-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காலு காவல் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலையம் 4-ம் இடம் பிடித்துள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் 8 வது இடத்தைப் பிடித்ததுள்ளது. தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட ஒரே காவல் நிலையம் இதுவாகும். .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment