இந்தியா இலங்கைக்கு இடையேயான 2 வது டெஸ்ட் முதல் நாள் முடிவு..,வலுவான நிலையில் இந்திய அணி…!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் படி முதல் டெஸ்ட் போட்டி டிரா வில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதி டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜயும் தவானும் களம் இறங்கினர். தவான் (23) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய புஜாரா (23) ரன்களுக்கு ஆட்டம் இழந்து நடையைகட்டினார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் கோலி மற்றும் தொடக்க வீரராக இறங்கிய முரளி விஜயும் நிதானமாக விளையாடினார்கள்.இதனால் அணையின் ஸ்கோர் ஆனது கணிசமாக உயர்ந்தது.இறுதியில் இருவரும் 150 ரன்களை கடந்தனர்.அதன் பின் விஜய்(155) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அவரை தொடர்ந்து அஜென்கிய ரஹானே 1 எடுத்து சண்டகரன் பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு பரிதாமாக ஆட்டமிழந்தார்.கேப்டன் கோலி 156 ரன்னுடனும்,ரோஹித் சர்மா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 371 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment