சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் பட்டம் வென்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பன்னாட்டு அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பர்தி ஆகியோர் விளையாடினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆறுக்கு நான்கு, ஆறுக்கு நான்கு என்கிற நேர் செட்களில் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றிபெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார்.