ஆவணங்களை சமர்பித்துள்ளோம்! உண்மை வெளியே வரும் என நம்புகிறோம்! – மாணவி பாத்திமா தந்தை லத்தீஃப் பேட்டி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வந்த கேரளத்து மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த தற்கொலை விவகாரத்தின் மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் விசாரணையில் மாணவின் கைபேசியில் பதியப்பட்டிருந்த கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட சில பேராசிரியர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாத்திமாவின் அப்பா லத்தீஃப், ‘ காவல்துறையினரிடம் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்துள்ளோம். விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘எனவும், ‘ காவல்துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்தனர்’ இவ்வாறு கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.