ஆளுநர் அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தலாம்!

சட்ட வல்லுனர்,அரசியல்சாசன விதிகளின்படி அரசு அதிகாரிகளை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று  விளக்கம் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகை இது தொடர்பாக  வெளியிட்ட அறிக்கையில், தெலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆளுநர் சென்று வருவது குறித்து விவாதிக்கபடுவதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஸ்ரீஹரி அனேவிடம் இருந்து பெறப்பட்ட கருத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டு மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

அதில், அரசியல்சாசன விதிகளின்படி தனது அதிகாரத்திற்கு உட்பட்டு ஆளுநர், மாவட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று சட்ட வல்லுனர் அனே தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியான சட்ட நிலைப்பாட்டை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Comment