ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் மலாலா…!!

உலகில் உள்ள அனைத்து பெண்களின் கல்விக்காக நிதி திரட்டும் திட்டத்திற்காக 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மலாலாவுடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது.
இத்திட்டம் குறித்து மலாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அவர்களது எதிர்காலத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், சமூக சேவை ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் அதிகாரத்தை அளித்து உதவி வருகிறது.மேலும் ஆப்பிள் நிறுவனம் பெண்களுக்காக நிதி வழங்குவதன் மதிப்பை தெரிந்து முன்வந்ததற்கு எனது நன்றி’ என கூறினார்.
மலாலாவின் இந்த அற்புதமான திட்டத்தால் நமது இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லெபனான், துருக்கி, நைஜீரியா உள்பட பல நாடுகளின் பெண்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment