ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய்!பின்னர் நடந்த விபரீதம்!

ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய்!பின்னர் நடந்த விபரீதம்!

  • ஆப்பரேசன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய் பிறந்த குழந்தையை கடித்து கொதறியதில் குழந்தை மரணம்.
  • மருத்துவமனையின் கவன குறைவால் நேர்ந்த கொடுமையின் காரணமாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரை அடுத்து உள்ள ஃபருகாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் ஆவார் .இவருடைய மனைவி காஞ்சன் ஆவார்.இவருக்கு சில நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விகாஸ் காலனியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு காஞ்சனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சுக பிரசவம் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு ரவிக்குமார் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பிரவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பின்னர் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரவிக்குமார் ஒப்பு கொண்டுள்ளார்.பின்னர் காஞ்சன் ஆப்பரேசன் தியேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவர்கள் குழந்தை நலமாக பிறந்துள்ளதாக ரவிக்குமாரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் குழந்தை ஆப்பரேசன் தியேட்டரில் சில மணி நேரம் இருக்க வேண்டும் மனைவியை வேற வார்டுக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளனர்.இந்நிலையில் ஆப்பரேசன் தியேட்டரில் இருந்து  ஊழியர் ஒருவர் கத்திகொண்டே ஓடிவந்துள்ளார்.

இதனை கண்ட குழந்தையின் தந்தை ஓடி சென்று உள்ளே பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.அங்கு அவரது குழந்தை கை, முகம் ஆகியவற்றில் காயங்களுடன் ரத்தம் கசிந்த நிலையில் அசைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளது .

பின்னர் அங்கு ஒரு தெரு நாயும் இருந்துள்ளது.பின்னர் பதட்டமாகிய ரவிக்குமார் அங்கிருந்த ஊழியர்களை அழைத்துள்ளார்.பின்னர் சிலர் வந்து நாயை விரட்டி அடித்துள்ளனர்.அதன் பிறகு ரவிக்குமாரை ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

பின்னர் உங்கள் குழந்தை இன்னும் பிறக்கவில்லை, சத்தம் போடாதீர்கள் என பொய்யாக கூறி சமாதானப்படுத்தியுள்ளனர்.பின்னர் ரவிக்குமாரிடம் பேசிய மருத்துவமனை நிர்வாகம் இந்த விஷயத்தை வெளியில் கூறாதீர்கள் நாங்கள் பணம் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

பின்னர் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் மருத்துவமனையில் நடந்த இந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஃபருகாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் ஆபரேஷன் தியேட்டர் ஊழியர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube