ஆணையத்திற்கு பல்லும் இல்லை! வாயும் இல்லை! காவிரி மேலாண்மை ஆணையத்தை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!!

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது பல் மட்டுமல்ல; வாயே இல்லாத ஆணையம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்திருந்தாலும் அதற்கு தன்னாட்சி அதிகாரம் இல்லை என ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அணைகள் அதன் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அணைகளைத் திறப்பதற்கு இந்த ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14 புள்ளி ஏழு ஐந்து டி.எம்.சி. தண்ணீர் எந்த மாதத்திற்கு குறைக்கப் போகிறார்கள் என்பதற்கும் வரைவுத் திட்டத்தில் விளக்கம் இல்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் ஆறு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டிலிருந்தாவது குறுவை உள்ளிட்ட சாகுபடி நீர்ப்பாசனத்துக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க அதிமுக அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment