ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிட்டன் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நாவல் தோல்வி அடைந்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 2வது நாளான இன்று மகளிர் அணிக்கான பேட்மிட்டன் காலிறுதி போட்டியில், இந்தியாவின் சாய்னா நாவல் மற்றும் ஜப்பானின் நோஜோமி ஒகுஹாரா இன்று விளையாடியுள்ளனர்.
இதில் சாய்னா நாவல் முதல் செட்டில் 7-11 என்ற கணக்கில் பின்தங்கினார். தொடர்ந்து முதல் செட்டை நோஜோமி 11-21 என்ற செட் கணக்கில் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து சாய்னா நோவல் 2-வது செட்டை 25-23 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் 3-வது செட்டை 16-21 என்ற புள்ளிகணக்கில் நோஜோமி ஆட்டத்தை கைப்பற்றினர்.
இதன் பிறகு நோஜோமி சாய்னாவை வீழ்த்தி வெற்றி அடைந்தார்.