ஆசியச் சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை : இந்திய வீராங்கனை..!

தலையைத் துணியால் மறைக்க வேண்டும் என்கிற ஈரானின் கட்டுப்பாட்டால் ஆசியச் சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என இந்திய வீராங்கனை சவுமியா அறிவித்துள்ளார்.

ஆசியச் சதுரங்கப் போட்டிகள் ஈரானின் ஹமடான் நகரில் ஜூலை 26முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளன. இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்கள் தலையை மறைக்கும் வகையில் துணியால் மூடிக் கொள்ள வேண்டும் எனக் கட்டுப்பாடு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து போட்டிகளில் பங்கேற்போரும் இதைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்திய வீராங்கனையும் இளையோர் சதுரங்கப் போட்டியில் முன்னாள் உலகச் சாம்பியனுமான சவுமியா இந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்தக் கட்டுப்பாடுகள் தனது தனியுரிமையை மீறும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு இதேபோல் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து ஈரானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்காமல் விலகியது குறிப்பிடத் தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment