மனம் திறந்த சுருதி ஹாசன்
அதற்காகத்தான் இந்த ஒரு ஆண்டு இடைவெளி எடுத்தேன் என்று ஒரு பேட்டியளித்தார்.
மீண்டும் நடிகை சுருதி ஹாசன் கூறியதாவது ஒரு ஆண்டு முழுவதும், எந்தப் படங்களிலும் நடிக்காமல் என் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்தேன் என்றும் , மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். என் அப்பாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். என் அம்மாவுடன் நடிக்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நானும் அம்மாவும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார். திறமையான நடிகர்களின் மகள் என்பதால், திரையில் தோன்றும் போது அந்த அழுத்தம் உங்களுக்கு அதிகமாகிறதா என்ற கேள்வி கேட்டபோது நான் எனது சொந்த முயற்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ”அப்பா நான்கு வயதில் இருந்து இந்தத் துறையில் இருக்கிறார். அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது என எனக்குத் தெரியும்” என்று கூறி இருக்கிறார்…
DINASUVADU