அரசு மருத்துவமனை லிப்ட் அப்பேரட்டரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்.

அரசு மருத்துவமனை லிப்ட் அப்பேரட்டரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்.

 

தூத்துக்குடியில் கடந்த மே 22 ம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு , தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் .உயிர் இழந்தவரின் குடும்பத்தினரையும் காவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களையும் புதனன்று தூத்துக்குடிக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார் .

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவருடன் 10 க்கும் அதிகமானோர் வந்திருந்தனர் , அனைவரும் முந்தியடித்து கொண்டு லிப்டில் ஏறினார் அவர்களிடம் லிப்ட் ஆபிரேட்டர் சாமுவேல் ஜான்சன் (22) பத்துபேருக்கு மேல் ஏறக்கூடாது என கூறியுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த ரஜினியின் ரசிகர் ஒருவர் நெஞ்சில் அவரை தாக்கி லிப்ட்டில் இருந்து வெளியேற்றி கீழே தள்ளிவிட்டு விட்டு அனைவரும் லிப்டில் ஏறி சென்றனர் . ரஜினி ரசிகர்களின் இந்த நடவடிக்கை நோயாளிகளை முகம் சுழிக்க வைத்தது .

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *