அரசு கல்லூரியில் முறைக்கேடு:முன்னாள் கல்லூரி இயக்குநர் உள்ளிட்ட 5 பேருக்கு தண்டனை!

சென்னை உயர்நீதிமன்றம் ,அரசு கல்லூரி ஆய்வுக்கூட உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் உள்ளிட்ட 5 பேரின் தண்டனையை உறுதி செய்துள்ளது.

1995ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த முறைகேட்டால் அரசுக்கு 56 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கல்லூரி கல்வி இணை இயக்குநர் காசிநாதன், அதிகாரி பெருமாள் மற்றும் திருப்பதிராஜ், கார்மேகம், கோவிந்தராஜன் ஆகியோர் மீதான வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2007ஆம் ஆண்டு காசிநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறையும் மற்ற 4 பேருக்கும் தலா ஓராண்டு சிறையும் விதித்தது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment