அம்மா சிலையா இது..????அதிரவைத்த ஆட்சியாளர்கள்……சுத்தி அடி தந்த நெட்டிசன்கள்…புதிய சிலை இன்று திறப்பு..!!
அம்மா சிலையா இது..????அதிரவைத்த ஆட்சியாளர்கள்……சுத்தி அடி தந்த நெட்டிசன்கள்…புதிய சிலை இன்று திறப்பு..!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதியசிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுசெயலாளாராக இருந்து அக்கட்சியை வழிநடத்திய வருமான ஜெயலலிதா 2016ல் டிச.5 ல் உடல்நல குன்றி மறைந்தார் என்று கூறப்படுகிறது.ஆனால் அதற்கான விசாரனையும் சென்று கொண்டு இருக்கிறது.இதில் மர்மங்கள் உள்ளது என்றும்,இல்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த சர்ச்சை ஒரு பக்கத்தில் உள்ள நிலையில் அக்கட்சி தான் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. ஆட்சியாளர்கள் அக்கட்சியின் தலைமை செயலகத்தில் ஜெயலலிதா சிலை ஒன்றை ஒபிஸ்-இபிஸ் திறந்து வைத்தனர்.
இந்த சிலையை ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் ஜெயலலிதா வின் சிலை உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டது.
ஆனால் சிலை ஜெயலலிதா போல் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தது.இன்றும் ஜெயலலிதா என்றால் எத்தனையோ பெருக்கு பிடிக்கும் அதுமட்டுமல்லாமல் அரசியலில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர்.
இவர் டெல்லி செல்லமாட்டார் டெல்லி இவரை தேடி வரும் என்றெல்லாம் கூட சொல்லுவர்கள் இப்படி அரசியல் செலவாக்கு பெற்ற ஒரு தலைவருக்கு இப்படி ஒரு சிலையா அமைப்பது என்று அக்கட்சியின் தொண்டர்களும், அரசியல் கட்சிகளும், மக்களும், நெட்டிசன்களும்,பத்தக்குறைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களும் விமர்சனங்களால் கொழுத்தி எடுத்தனர். இதில் ஹைலைட் பெற்றது ஆறு விரல்களும்,முகமும் தான்.
திறக்கப்பட்ட 7 அடி உயரமுள்ள அந்த வெண்கல சிலைய சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு பக்கத்தில் நிறுவப்பட்டது.
முன்பே கூறியது போல் பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர். மேலும் சிலை ஜெயலலிதாவைப் போல இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.
சிலைக்கு எதிர்மறை விமர்சனங்கள் குவிய தொடங்கியது.இதனால் மாட்டி கொண்டோமோ என்ற பாணியில் சிலை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று சுத்தியடி விமர்சனத்திற்கு பதிலாக வந்தது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் புதிய சிலை உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட அந்த சிலையை இன்று ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் திறக்கபட உள்ளது.
இந்த திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்துகொள்கின்றனர்.
அவ்வாறு புதியதாக உருவாக்கப்பட்ட புதிய சிலையை காலை 9:30 மணி அளவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்-இபிஎஸ் திறந்து வைக்கின்றனர்.பார்ப்போம் இந்த சிலையாவது ஜெயலலிதா போல் இருக்குமா..? என்று…மக்கள் தங்களுக்குள் முனுமுனுக்கின்றனர்.
DINASUVADU