அமைச்சர் பாண்டியராஜன் காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்த திருமணிசெல்வன் உடலுக்கு அஞ்சலி!

அமைச்சர் பாண்டியராஜன் காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்த திருமணிசெல்வன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சத்திற்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கினர். பட்டாபிராம் அடுத்த கரிமேடு பகுதியை திருமணிசெல்வன் காஷ்மீரில் சுற்றுலா சென்ற போது அங்கு எதிர்பாராத விதமாக நடைபெற்ற கலவரத்தில் கல்லடிப்பட்டு உயிரிழந்தார்.

நேற்று இரவு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment