அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ,ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தது. இதை அடுத்து டெல் அவி-வில் இருந்த தங்கள் நாட்டு தூதரகத்தை அமெரிக்கா, ஜெருசலேமுக்கு மாற்றியுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 14ஆம் தேதி அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் தூதரக திறப்பு விழாவில், தாம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.