அடுத்த வாரத்திலிருந்து அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த வாரத்திலிருந்து அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த வாரத்திலிருந்து அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது . பள்ளிக்கல்வி துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது . தொலைநோக்கு சிந்தனையுடன் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .

நடப்பாண்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை ரூ.14 ஆயிரம் கோடி. இதையெல்லாம் தாண்டிதான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம் .அடுத்த வாரத்திலிருந்து அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube