அகிலேஷ் யாதவ் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்தார்!

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ,தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார்.

தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரசேகர ராவ் கர்நாடகாவில் தேவகவுடாவையும், தமிழகத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ்,  ஐதராபாத்தில் தெலங்கானா முதவலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்து பேசினார். சந்திர சேகரராவ் அளித்த விருந்து நிகழ்ச்சியிலும் அகிலேஷ் பங்கேற்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment