கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் – ஸ்டீபன் பிளமிங்..!

கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் – ஸ்டீபன் பிளமிங்..!

கெய்க்வாட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். 

நேற்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். இவர் அடித்த இந்த ரன்களே சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்தது. நடப்பாண்டு தொடரில் மட்டும் கெய்க்வாட் 5 போட்டிகள் விளையாடி 142 ரன்கள் அடித்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதத்தை விளாசியுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் சிறப்பாக விளையாடியதால் அவர் யாரென்று அடையாளத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றும் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube