விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?

முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிப்பதாக விஜய்சேதுபதி இருந்தார். இதற்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதி இறுதியாக முரளிதரன் வரலாற்று படத்தில் இருந்து விலகினார்.

இதனால், சமூக வலைத்தளமான டிவிட்டரில் ரித்திக் என்ற ஒரு நபர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகள் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட நபரின் ஐ.பி.முகவரியை வைத்து ஆய்வு செய்ததில் அவர்  இலங்கையை சேர்ந்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube