ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்: அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – யுஜிசி

ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற  அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது குறித்து கடந்த 4-ம் தேதி யுஜிசி சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஜனவரி 2021-ம் ஆண்டுக்கான படிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம். ஆனால், முன்னதாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) இருந்து அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற  அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-21 ஆம் கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களும், யுஜிசியின் விதிமுறைகளின்படி தகுதி வாய்ந்த நிறுவனங்களும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை அக்.31 வரை நடைபெறும் என யூஜிசி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. +2 மறுதேர்வு முடிவுகள் அக். 10க்குள் வெளியிடப்படும்  என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அக்.10 +2 தேர்வு முடிவுகள் வரை கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நீட்டிக்க கோரிய வழக்கில் சிபிஎஸ்இ, யுஜிசி உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்