ஐபிஎல் தொடரில் புதிய மைக்கல்லை எட்டிய சந்தீப்!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா அணி அபாரமான வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் போட்டியில் பஞ்சாப் – ஹைதராபாத் அணிகள் மோதிவருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது. 4 ஆம் ஓவரை சந்தீப் ஷர்மா வீச, 17 ரன்களில் மந்தீப் சிங்க் வெளியேறினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது 100 வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.