விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!

விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா குவின்டன் டி காக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடி வந்த ரோகித் 12 ரன்களில் வெளியேறினார். பின்னர், சிறப்பாக விளையாடிய குவின்டன் டி காக் 33 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் 5 பவுண்டரி அடங்கும்.

இதையடுத்து, இறங்கிய சூர்யகுமார் யாதவ் 17 ரன்களில் வெளியேற, பின்னர், திவாரி அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஹார்திக்  பாண்ட்யா தொடர்ந்து 2 சிக்ஸர் விளாசினார். இந்நிலையில், அதிரடியாக விளையாடி வந்த திவாரியை 14-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் டு பிளிஸ்சிஸிடம் தனது கேட்சை திவாரி கொடுத்தார்.

திவாரி 42 ரன்கள் விளாசினார். அதில்,  3 பௌண்டரி 1 சிக்ஸர் அடங்கும். அதேபோல  ஹார்திக் பாண்ட்யாவும் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் டு பிளிஸ்சிஸிடம் தனது கேட்சை கொடுத்தார். பின்னர், இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 , பொல்லார்ட் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக  மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 162  ரன்கள் எடுத்தனர்.

சென்னை அணியில் லுங்கி நிகிடி 3 , ரவீந்திர ஜடேஜா 2 மற்றும் சாம்கரண் , தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை பறித்தனர். சென்னை அணி 163 ரன்கள்  இலக்குடன் களமிறங்க உள்ளது .

author avatar
murugan
Join our channel google news Youtube