போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!

போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் நேற்று தொடங்கப்பட்டது.

போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கி, கேரள அரசு நேற்று இ-செல்லான் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி உடனடியாக அபராதம் செலுத்த முடியும். இந்த புதிய முறையை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

இதனையடுத்து அவர் பேசுகையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது முன்னதாக புகார்கள் வந்தது   என கூறினார். ஆனால், இப்போது போக்குவரத்து கேமராக்கள் குற்றங்களை துல்லியமாக பதிவுசெய்கின்றன மற்றும் நேரடி தொடர்பு இல்லாமல் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், புகார்களைத் தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார்.  தற்போது, சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவது இன்னும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube