அநாகரீகத்தின் உச்சம்! வக்கிரத்தின் உக்கிரம்! திருமாவளவன் ட்வீட்!

அநாகரீகத்தின் உச்சம்! வக்கிரத்தின் உக்கிரம்! திருமாவளவன் ட்வீட்!

விஜய் மகளுக்கு மிரட்டல்  விடுக்கப்பட்டது குறித்து திருமாவளவன் ட்வீட்.

பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்தில் அவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் என்னவென்றால், முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றசாட்டு கிளம்பியதால், இந்த எதிர்ப்பு கிளப்பியது.

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன்  முரண்பாடுகளுக்காக அவருடைய அன்பு மகள் குறித்து விமர்சிப்பது  உச்சம், வக்கிரத்தின் உக்கிரம், இழிவின் இழிவு.  கேவலத்தை  செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வெளியுறுத்துகிறேன்.’ என  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube