மிஸ் பண்ணிடாதீங்க: இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசய “ப்ளூ மூன்”!

மிஸ் பண்ணிடாதீங்க: இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசய “ப்ளூ மூன்”!

76 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு வானில் “ப்ளூ மூன்” தோன்றவுள்ளது.

படங்களில் ஹலோவீனின் பயமுறுத்தக்கூடிய இரவு காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய நீல நிற நிலவு நாளை வானில் தோன்றவுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் எதனால் நிலா நிலவு அதாவது ப்ளூ மூன் என இது அழைக்கப்படுகிறது தெரியுமா? ஒரே மாதத்தில் தோன்றக்கூடிய இரண்டாவது பௌர்ணமி என்பதால் தான்.

அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு அக்டோபர் 31 ஆம் தேதி மீண்டும் வருகிறது. இந்த பௌர்ணமி சற்று பெரிதாக காணப்படும். இது அடிக்கடி நிகழும், இறுதியாக 2018 மார்ச் மாதம் நிகழ்ந்தது. நாம் எதிர்பார்ப்பது போல நீல நிறமாக இருக்காது.

ஆனால், இந்த முறை தோன்றக்கூடிய நிலவு நீல நிறத்துடன் காணப்படும். ஏனென்றால், இது 1944 ஆம் ஆண்டுக்கு பிறகு 76 ஆண்டுகள் கழித்து வரக்கூடிய உண்மையான நீல நிறமுடைய பெரிய பௌர்ணமி.

இன்று வந்ததற்கு பின் அடுத்த ப்ளூ மூன் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் வரும், ஆனால் இது போல நீல நிறமளிக்காது. சாதாரண கண்களால் பார்க்கும் பொழுது அவ்வளவாக தெரியாவிட்டாலும், டெலிபோட்டோ உதவியுடன் பார்க்கையில் நிச்சயம் நம்மை பிரமிக்க வைக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இரவு 8 மணிக்கு மேல் தெரியும் என கணிப்பின் படி கூறுகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube