ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்… மாநில அரசு அறிவிப்பு…

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்… மாநில அரசு அறிவிப்பு…

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில், கடந்த மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்தது. எனினும் இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதனால் பல மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதற்கிடையே, ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலாளர் நீலம் சாஹ்னி தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube