அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிராவின் மும்பையில் மற்றும் தானே பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது மேலும் இந்த நிலையில் இந்த கனமழை காரணமாக அப்பகுதியில் ஆரஞ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி கொண்டிருப்பதால் மேற்கு கடற்கரையில் அதன் ஒருங்கிணைப்பு வலுபடுத்தும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.