இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.!

இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.!

செகங்கமங்கலம் கிராமத்தில் இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

தஞ்சை மாவட்டம் செகங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, செல்லத்துரையின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பட்டுகோட்டையின் பேராவூரணி சாலையில் செல்லத்துரையின் சடலதைதை வைத்து அவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube