ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்… காரணம் இதுதானா..?

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்… காரணம் இதுதானா..?

நேற்று ஐபிஎல் போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்ய குமார் யாதவிற்கிடேயே நடந்த  சம்பவம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 48 வது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. முதலில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது அதிகபட்சமாக படிக்கல் 74 ரன்கள் அடித்தார்.

அடுத்ததாக 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 12 ஓவரின் கடைசி பந்தை வீசும் போது சூர்ய குமார் யாதவ் அந்த பந்தை எதிர்கொண்டார் அப்போது அந்த பந்தை கோலி கையில் தேய்த்து சூர்ய குமார் யாதவை முறைத்தார். பதிலிற்கு சூர்யகுமார் யாதவும் முறைத்தார் உடனே விராட் கோலி வேகமாக முறைத்தபடி சூர்யா குமார் யாதவ் பின்னால் நின்றார். இதனை சூர்யகுமார் யாதவ் கண்டுகொள்ளாத படி நேராக சென்றார்.

இதனைத் தொடர்ந்து அருமையாக விளையாடிய சூரிய குமார் யதாவை பலர் பாராட்டி வருகின்ற நிலையில், விராட் கோலி மற்றும் சூர்ய குமார் யாதவ் இடையே நடந்த இந்த சம்பவம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube