இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு – அமெரிக்க ஆய்வு

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு – அமெரிக்க ஆய்வு

ஒரு புதிய உலகளாவிய ஆய்வின்படி, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தை உயிரிழப்புகள் சமையல் எரிபொருட்களிலிருந்து வரும் தீப்பொறிகள் தான் காரணமாக இருக்கிறதாம்.

கடந்த, 2019 ஆம் ஆண்டில் 1,16,000 க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் காற்று மாசுபாட்டால் இறந்தனர். இதனை, தொடர்புடைய எண்ணிக்கை துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 2,36,000 ஆக உள்ளது என்று குளோபல் ஏர் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவல்யூஷனின் குளோபல் பார்டன் ஆஃப் டிசைஸ் ஆகியவை ஒரு ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.

ஒரு குழந்தையின் ஆரோக்கியம் ஒவ்வொரு சமூகத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாகும், மேலும் இந்த புதிய சான்றுகள் தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பாக அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன  என்று HEI இன் தலைவர் டான் க்ரீன்பாம் கூறினார்.

இதற்கிடையில், காற்று மாசுபாடு 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 6.7 மில்லியன் உயிரிழந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. அதில், உயர் இரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு மற்றும் உணவு அபாயங்கள் ஆகியவை  இறப்புக்கு நான்காவது முக்கிய காரணியாக அமைகிறது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube