சென்னை அணிக்கு கூடுதல் நெருக்கடி.. அணியில் இருந்து பிராவோ விலகல்!

சென்னை அணிக்கு கூடுதல் நெருக்கடி.. அணியில் இருந்து பிராவோ விலகல்!

சென்னை அணியின் அதிரடி வீரர் பிராவோ, காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி, தாயகம் திரும்பவுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விலங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது.

தொடர் தோல்வி காரணமாக சென்னை அணியையும், கேப்டன் தோனியையும் விமர்சிக்க தொடங்கினார்கள். இந்தநிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகி, வெஸ்ட் இண்டீஸ் திரும்பவுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube