காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்… இந்திய இராணுவம் தக்க பதிலடி…

நம் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி, கஸ்பா மற்றும் மால்டி பகுதிகளைக் குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் இந்த திடீர் தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj