திரையரங்குகள் திறப்பு – 28 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

திரையரங்குகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில்,  முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.

தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அந்த வகையில் ,அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.அதன்படி நாடு முழுவதும் பல இடங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆகவே திரையரங்குகளை திறக்க வலியுறுத்தி முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.இந்நிலையில் வருகின்ற  28 ஆம் தேதி திரையரங்கு திறப்பதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி .