மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் பெண்களை இழிவாக பேசியதாக, அவருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திருமாவளவனுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டங்களும் நடத்தினர்.

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு. மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன.’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எல்லாரும் போராட்டம் நடத்தலாம், யாத்திரையும் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube