வண்ண எச்சரிக்கைகள் அறிவிப்பு…கேரளாவில் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • இதனையடுத்து கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும்,
  •   எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும்,
  • திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட்  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
author avatar
Kaliraj